Begin typing your search above and press return to search.
குமரியில் மோட்டார் சைக்கிளில் கள்ளச் சாராய விற்பனை - பொறி வைத்து பிடித்த போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நூதன முறையில் மோட்டார் சைக்கிளில் சென்று கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர் கைது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காளியப்பன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கரன்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகண்ணன் (38) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரது இருச்சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3 லிட்டர் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கள்ளசாராயம் மற்றும் சாராயம் விற்ற பணம் ரூபாய் 3000/- மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மகேந்திர கண்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.