Begin typing your search above and press return to search.
கொரோனா எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாெழுது பூங்காக்கள் மூடல்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.
HIGHLIGHTS
கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நோய் தொற்று பலமடங்காக உயர்ந்து வருகிறது.
நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் தமிழக அரசும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காவிற்கு செல்ல அனுமதி மறுத்தது.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டன.