/* */

மிருகங்களின் கொம்புகளாலான கைவினை பொருட்கள் பறிமுதல்; வேட்டை கும்பலுக்கு தொடர்பு

மிருகங்களின் கொம்புகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் தயாரிப்பில் தமிழகம் முழுவதும் பலருக்கு தொடர்பு.

HIGHLIGHTS

மிருகங்களின் கொம்புகளாலான கைவினை பொருட்கள் பறிமுதல்; வேட்டை கும்பலுக்கு தொடர்பு
X
பறிமுதல் செய்யப்பட்ட யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகளால் ஆன கைவினைப் பொருட்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரத்தில் இரு தினங்களுக்கு முன்பு யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெங்களூருவில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தென்காசியை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வனவிலங்கு வேட்டையாடும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவத்தில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் வனத்துறையினர் தனிப்படை அமைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலும் வேட்டையாடும் கும்பல்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 10 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு