Begin typing your search above and press return to search.
ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு
குமரியில் ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்தது.
HIGHLIGHTS
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் அருகே உள்ள மேல்நிலை பள்ளியில் கன்னியாஸ்திரிகள், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் மரக் கன்றுகளை நட்டனர்.
ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டினோம் கொரோனவில் சிக்கியவர்களின் ஊயிரை காப்பற்ற, ஆக்சிஜனுக்காக அலைந்தோம். இனியாவது மரங்களை வளர்ப்போம். காடுகளை காப்போம் என அப்போது அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆக்சிஜன் தரும் மரங்களை பாதுகாப்பது குறித்தும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.