Begin typing your search above and press return to search.
குமரியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
குமரியில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகம் படும்படியாக நின்ற இைர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த நிலையில் அவரை சோதனை செய்த போலீசாருக்கு அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரை கோட்டார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் நாகர்கோவில் ரெயில்வே காலனியை சேர்ந்த நம்பிராஜன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.