/* */

கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை

கன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் இரட்டை கொலை நடந்தேறியது.

HIGHLIGHTS

கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை
X

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் முருகன் குன்றம் கோவில் பகுதியில் ஒருவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த கன்னியாகுமரி போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் சுனாமி காலனி பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் (24) என்பதும் கஞ்சா பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் கொலை நடந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகேயுள்ள புதருக்குள் மற்றும் ஒரு வாலிபரின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது.

அவர் கன்னியாகுமரி அருகே உள்ள குண்டல் ஊரைச் சேர்ந்த செல்வின் (24) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி தலைமையில் போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரம் தொடர்பாக கும்பலுக்குல் நடைபெற்ற மோதலில் இந்த இரண்டு கொலைகள் நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இரட்டை கொலை நடந்த சம்பவம் கன்னியாகுமரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 24 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை