/* */

குமரியில் சட்டவிரோத மது விற்பனை: 642 மது பாட்டில்கள் பறிமுதல்

குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை கைது செய்த போலீசார் 642 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் சட்டவிரோத மது விற்பனை: 642 மது பாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரித்தமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, எஸ்.பி தனிபிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தபோது பாரில் சட்டவிரோதமாக சுஜின் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சோதனை செய்த போலீசார், 642 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 9 ஃபுல் பாட்டில் மற்றும் 15 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சுஜினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது