/* */

குமரி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் பெரும் கவலை

குமரியில் விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

குமரி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் பெரும் கவலை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கன்னிப்பூ, கும்பப்பூ என்ற இருபோக நெல் சாகுபடி நடைபெறும், அதன்படி இந்த வருடம் கன்னிப்பூ சாகுபடி கடந்த மே, ஜூன் மாதங்களில் தொடங்கியது.

பூதப்பாண்டி, அருமநல்லூர், புத்தேரி உட்பட மாவட்டம் முழுவதும் 5,742 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் முதலில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கன்னிப்பூ நெல் அறுவடை பணிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த மாதம் 15 ம் தேதியுடன் கன்னிப்பூ அறுவடை பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து கும்பப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் உரம் வாங்க சென்றால் உரம் தட்டுப்பாடு என கூறி நான்கில் ஒரு பங்கு உரத்தை மட்டுமே தருவதாகவும் ஏற்கனவே பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்தாலும் நெல்லுக்கு போதிய பணம் கிடைக்காததால் அழிவை சந்தித்து வரும் நாங்கள் உரம் தட்டுப்பாட்டால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் விவசாய நிலங்களுக்கு ஏற்ப உரம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 13 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...