/* */

உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசம்: கள்ளக்காதல் ஜோடி கைது

உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசம் அனுபவித்த கள்ள காதல் ஜோடியை குமரி போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசம்: கள்ளக்காதல் ஜோடி கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 44-வயதான பேபிசுதா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைக்க, பேபிசுதா தனது வீட்டை பூட்டி விட்டு ஷர்மிளாமோள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும் அவர் அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 7-மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் உபயோகத்தில் இருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த வாலிபர் செல்போனில் இருந்து பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அந்த வாலிபரை பெத்தேல்புரத்தில் உள்ள வீட்டில் அவரது வீட்டில் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவரையும் அவருடன் இருந்த இளம்பெண் ஒருவரையும் கைது செய்து மண்டைக்காடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27-வதான ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரான பபின் என்பதும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு சொந்த ஊர் வந்ததும் தெரிய வந்தது. மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவருடன் நெருங்கி பழகி கள்ள தொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு கட்டத்தில் உல்லாச வாழ்க்கைக்கு பணம் இல்லாத நிலையில் ஷர்மிளாமோள் தன்னை அழைத்து சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபி சுதா பொன்பொருளுடன் நல்ல வசதியாக இருப்பதாகவும் வீட்டில் நகைகள் எங்கெங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்றும் அவரது வீட்டை கொள்ளையடித்தால் நாம் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தானும் ஷர்மிளா மோளின் திட்டத்திற்கு உடன்பட இருவரும் திட்டம் தீட்டி அவரது கணவர் சகோதரி பேபி சுதாவை கடந்த ஜனவரி மாதம் 26-ம் விருந்துக்காக வீட்டிற்கு அழைத்து ஷர்மிளாமோள் தங்க வைத்த நிலையில் 27-ம் தேதி இரவு திட்டமிட்டப்படி தான் சேரமங்கலம் சென்று அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்ததோடு ஷர்மிளாமோள் இடம் செல்போனில் தொடர்பு கொண்டு நகைகள் எங்கெங்கு இருக்கிறது என்று கேட்டு அவரின் அறிவுறுத்தலின் படி 50-சவரன் தங்க நகைகளை அங்கிருந்து கொள்ளையடித்து தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஷர்மிளா தனது கணவரிடம் வேலைக்கு நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்து விட்டு சொந்த ஊர் திரும்பியதாகவும் யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் அடிக்கடி அதேப்போல் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பதும் தற்போது நகைகளை விற்ற பணத்தில் தான் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசம் செய்ததோடு இருவரும் வெளியூர்களுக்கு செல்லாமல் அந்த வீட்டிலேயே அடிக்கடி தனிமையாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் போலீசார் இருவரையும் தனது வீட்டில் வைத்து பிடித்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 50-சவரன் தங்க நகைகளை மீட்டதோடு இன்று காலை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்க உறவினர் வீட்டிலேயே கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசமாக இருந்து சிறை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  2. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  3. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  6. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  7. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  8. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  10. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...