/* */

வீடுகளுக்குள் மழை வெள்ளம்: 9 கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்

குமரியில் கனமழை காரணமாக 9 கிராமங்களுக்கு பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வீடுகளுக்குள் மழை வெள்ளம்: 9 கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்
X

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குமரி மாவட்டம் வரலாறு காணாத அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி அணைகளில் இருந்து 18 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதேபோன்று தாமிரபரணி ஆறு, கோதையாறு பறளியாறு, பழையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பழையாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் அக்கறை பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது, தேரூர், மருங்கூர், அக்கறை உள்ளிட்ட பகுதிகளுக்கான பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

Updated On: 13 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?