/* */

அதிமுக சார்பில் கீரைமண்டப பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பாக கீரை மண்டப பகுதியில் கோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

அதிமுக சார்பில் கீரைமண்டப பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் அதிமுக பகுதி கழக செயலாளர் கோல்டு மோகன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்  சோமசுந்தரம்.

அதிமுக சார்பில் கீரை மண்டபம் பகுதியில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சரும் , மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் பழங்கள் தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினர்.

கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தில் கடும் கோடை போலவே கடும் வெப்பம் பொதுமக்களை தாக்கி வருகிறது குறிப்பாக மூத்த குடிமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் மேலும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் தமிழகத்தின் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அதிமுக சார்பில் தமிழக முழுவதும் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு பகுதிகளை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழரசம், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் செயலாளர் கோல்டு மோகன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி திராட்சை ஆரஞ்சு பழரசம், மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு பழரசங்கள் என வழங்கினர்.

காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் அதிமுக பகுதி செயலாளர் கோல்டு மோகன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவின்போது பொது மக்களுக்கு பழங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் மற்றும் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்.

அவ்வழியாக வந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் வெள்ளரிப்பிஞ்சு, மோர் மற்றும் திராட்சைகள் உள்ளிட்டவைகளை நிர்வாகிகள் சென்று வழங்கினர்.

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர் ஸ்டாலின் , கோல்ட் ரவி, மாவட்ட மாணவரணி திலக், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்