ஆட்டோ ஆவணங்கள் ஆய்வு : 13 வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம்
மோட்டார் வாகன ஆய்வாளர் பேருந்து நிலையம், கலெக்ட்ரேட் ஆகிய இடங்களில் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாக ஆட்டோக்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் முறையான ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் செயல்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தொடர்பு புகார் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை , தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சாலையில் செல்லும் அனைத்து ஆட்டோக்களையும் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் முறையான அரசு பதிவு ஆவணங்களான FC, இன்ஸ்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் இல்லாத 13 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தி வைத்து ஆவணங்களை சரி பார்த்து வருகிறார்.இதில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வீடுகளில் ஆவணங்கள் உள்ளதாகவும் , அதை சமர்பித்து வாகனத்தை எடுத்து செல்வதாக கூறி உள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே போன்று உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வந்த ஏழு ஆட்டோக்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதமாக ஒரு லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.