Begin typing your search above and press return to search.
சாலை பாதுகாப்பு வாரம்: வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்
ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி காவல்துறை , வாகன ஓட்டிகளுக்கு இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த முகாமை தலைமையேற்று நடத்திய டிஎஸ்பி சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பாக பணியாற்றி வரும் போக்குவரத்து ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கியதோடு சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாராட்டி டிஎஸ்பி சுனில் குமார் சான்றிதழ் வழங்கினார்.