/* */

ஸ்ரீபெரும்புதூர் : பராமரிப்பு இன்றி காணப்படும் சுங்கச்சாவடி கழிவறைகள்

ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் பராமரிப்பு இன்றி இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : பராமரிப்பு இன்றி காணப்படும் சுங்கச்சாவடி கழிவறைகள்
X

பராமரிப்பு இன்றி இருக்கும் சுகாதார வளாகம்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணலூர் பகுதியில் அமைந்துள்ளது சுங்கசாவடி. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த சுங்க சாவடி பயன்பாட்டில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதனை கடந்து செல்கிறது.

கடந்த பத்து வருடங்களாக சுங்கசாவடியில் வசூல் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. எந்த ஓரு அடிப்படை வசதிகளும், இது நாள்வரை மேற்கொள்ளவில்லை என்பது கடும் குற்றச்சாட்டாக உள்ளது.

இது மட்டுமில்லாமல் சுங்கச்சாவடியில் சுகாதாரமான குடிநீர் , போதிய கழிப்பறை வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் பயணிகளுக்கு செய்து தரப்படவில்லை .

இதனால் பலர் தங்கள் இயற்கை உபாதைகளுக்காக வெளி பகுதியை நாடும் நிலை உள்ளது. இங்கு உள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை, இதனால் இதை யாரும் பயன்படுத்துவது இல்லை, அனைவரும் பயன்படுத்தும் நிலையில் ஒரு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!