/* */

காவல்துறை தபால் வாக்குபதிவு: முதல் நாளில் 48 சதவீதம் பதிவு

தேர்தல் பணியாற்ற உள்ள காவல்துறை , ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு பதிவு நடைபெற்றது

HIGHLIGHTS

காவல்துறை தபால் வாக்குபதிவு:  முதல் நாளில்  48 சதவீதம் பதிவு
X

தபால் வாக்கு பதிவு செய்ய வந்த காவல்துறையினர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான காவல்துறை, ஊர்க்காவல் படை மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கிய நிலையில் இன்று 391 நபர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தினர்.

தமிழக முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி உள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் அலுவலர்கள் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பதிக்கும் பணியினை நேற்று ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்கும் மூலம் வாக்கு பதிவு செலுத்தும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்போரூர் பகுதிக்கு ஒரு வாக்குப்பதிவு பெட்டியும் , மதுராந்தகம் செய்யூர் உத்திரமேரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நபர்களுக்கு மற்றொரு உருவாக்கு பெட்டி என இரு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு அலுவலர்கள் உரிய ஆவணங்கள் காட்டி காவல்துறையினர் ஓய்வு பெற்ற காவல் துறையினர் ஊர்காவல் படையினர் என பல தங்கள் வாக்குப் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவுகளை கண்காணிக்க அரசியல் கட்சி பிரமுகர்களும், துப்பாக்கி ஏந்திய காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை என இன்றும் , நாளையும் என இரு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 147 ஊர் காவல் படையினர் உள்ளிட்ட 814 நபர்கள் தபால் வாக்கு பதிவு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் 347 ஆண்களும் 44 பெண்களும் என மொத்தம் 391 நபர்கள் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது 48 சதவீதத்தை பெற்றுள்ளது.

Updated On: 11 April 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்