/* */

அடிப்படை வசதிகள் இன்றி மருத்துவ முகாம், மாற்று திறனாளிகள் சாலைமறியல்

காஞ்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி நடைபெற்ற மருத்துவ முகாமை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் இன்றி மருத்துவ முகாம், மாற்று திறனாளிகள் சாலைமறியல்
X

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகளை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வழங்குவர். அதனடிப்படையில் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு உரிய நலதிட்ட உதவிகள் மற்றும் பிற சலுகைகள் பெற இச்சான்றிதழ் உதவும்.

இதற்கான சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கேற்க அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கூடினர்.

காலை 8 மணி முதல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி வரை மருத்துவர்கள் வராததால் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்தனர்.

மேலும் இவர்களுக்கு போதிய வீல்சேர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நலத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என கூறி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடும் வெயில் கொரோனா பரவலை தடுக்க அரசு விதி முறைகளை பின்பற்றி காலையிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற சூழ்நிலை உருவாகி இருக்காது எனவும்

தங்களால் எந்த ஓரு செயலையும் செய்ய முடியாமல் பல மணி நேரம் தவிர்த்து கொண்டிருந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தனர்

Updated On: 13 Aug 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!