/* */

மழைநீர் வடிகால்வாய் பணி: குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு

அமைச்சர் அன்பரசன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

மழைநீர் வடிகால்வாய் பணி: குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
X

மாங்காடு பகுதியில் நடைபெற்ற வெள்ள தடுப்பு பணிகளை விளக்கும் பொதுப்பணித் துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை இன்று குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில், ஒமேகா பள்ளி அருகில், கட்டப்பட்டு வரும் மூடிய வடிகால்வாய் பணிகளையும், பார்வையிட்டு, மணப்பாக்கம் ஊராட்சி, தர்மராஜபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்,

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகரில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், திரெளபதி அம்மன் கோவில் தெரு மற்றும் லட்சுமிபுரம் மெயின் ரோடு பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பார்வையிட்டு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலை இடையே அமைக்கப்பட்டு வரும் கீழ்மட்ட கால்வாய் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் மலையம்பாக்கம் ஊராட்சி, வசந்தபுரி பகுதி குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஐயப்பன்தாங்கல் ஈவிபி பார்க் பகுதிகளில் செயல்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், கொளப்பாக்கம் ஊராட்சி இராமகிருஷ்ணா நகரில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்,

பின்பு சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் பார்வையிட்டு, ஆதனூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி)சங்கீதா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், சரவணக்கண்ணன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுபணிதிலகம் மற்றும் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 2 Dec 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...