காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 385 சிறப்பு தடுப்பூசி முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது.
HIGHLIGHTS
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் பொதுமக்கள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, 385 இடங்களில் காலை 9 மணி முதல், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலர், இன்னும் இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தாத நிலையில் இம்முகாம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அதிக மக்கள் கூடும் இடம், வணிக வளாகம் , குடியிருப்போர் நல சங்க வளாகம் மற்றும் தொண்டு நிறுவன கட்டிடங்கள் என பல இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில், பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.