காஞ்சிபுரம் காவல்துறை- விழுதுகள் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
காஞ்சிபுரம்காவல்துறையுடன் இணைந்து விழுதுகள் அமைப்பினர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
HIGHLIGHTS
விழிப்புணர்வு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளை காட்டிலும் கடந்தாண்டு சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் விபத்துகளை குறைக்க இந்தாண்டு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியபட்டு அப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு விபத்துகளை தவிர்க்க கிராம மக்கள் கடக்க பாதை அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் விழுதுகள் அமைப்பினர் நகரின் முக்கிய சந்திப்புகளில் சாலை விழிப்புணர்வு போக்குவரத்து காவலர்களும் இணைந்து நிகழ்ச்சி நடத்தினர். இதில் சாலை விதிகள் , தலைகவசம் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் உள்ளிட்டவைகளை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் சாலைகளில் பாதாகைகள் ஏந்தி அனைவரும் இந்தாண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு விபத்தில்லா காஞ்சிபுரத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.