/* */

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருட்டு

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
X

காஞ்சிபுரம் அருகே திருட்டு சம்பவம் நடந்த  வீடு.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் இருச்சக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி அலமேலு தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.

காலை 9.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஜன்னல் பக்கத்தில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலை 5.45 மணிக்கு வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

பீரோவை முள் வெட்டும் கத்தியால் நீக்கி, பீரோவில் இருந்த 5 சவரன் நகைை, சுமார் 80 கிராம் வெள்ளி , ரொக்க பணம் ₹2000 ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர் .

இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...