/* */

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி.

HIGHLIGHTS

கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கல்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி வழங்கினார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது. தமிழகத்தையை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில், பெற்றோரை இழந்து, தனிமைப் படுத்தபட்டு வாழ்வாதாரம் கேள்வியாகியுள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் இதற்கான விழா இன்று நடந்தது. ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமைத் தாங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் 62 பேருக்கு, தலா ரூ.6 லட்சத்தை நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் அவர்களது கல்வி மற்றும் வாழ்வாதாரம் நிலை நிறுத்த பெரிதும் உதவும் எனவும், இதை உதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும்‌ தடுப்பூசி எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிழ்ச்சியில் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீ தேவி, எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ.,கள் சுந்தர், சி.வி.எம்.பி., எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...