/* */

கொள்முதல் செய்யாததால் பூஞ்சையடைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் கவலை

கொள்முதல் தேதி கடந்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் பூஞ்சை அடைந்து தரம் குறைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் புகார்

HIGHLIGHTS

கொள்முதல் செய்யாததால் பூஞ்சையடைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் கவலை
X

விஷார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் பூஞ்சையடைந்துள்ளதை காட்டும் விவசாயி 

கடந்தாண்டு பெய்த பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அறுவடை காலம் கடந்த மாதம் துவங்கியதால் அறுவடை பணியை விவசாயிகள் துவக்கினர்.

விவசாயிகள் அறுவடை செய்த நல்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப மண்டல கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டது.

கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க விவசாயிகள் தங்கள் பெயரை இணையதளத்தில் சரியான ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்முதலை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த தேதி முடிந்தும் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பின்றி கிடக்கும் நெல் மூட்டைகள் நினைந்து சேதமாகியது.

இதனால் நெல் மூட்டைகள் பூஞ்சை அடைந்து தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பதிவு கடந்து 20 நாட்களாகியும் கொள்முதல் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உடனடியாக நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!