/* */

தேர்தல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு!

தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் பட்டாசுகள் விதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.

HIGHLIGHTS

தேர்தல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு!
X

உத்திரமேரூர் பகுதியில் பாமக வேட்பாளரை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசுகள்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு தேர்தல் நடைபெறும் தேதி அறிவித்த நேரம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்தும் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் 12 நிலை குழுக்கள், நான்கு காணொளி காட்சி குழுக்கள் என அமைக்கப்பட்டு 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணிகள் நடைபெற்று வந்தது.

மேலும் பறக்கும் படையினர் ஒரு சில இடங்களில் மட்டுமே அனுமதியின்றி எடுத்துச் சென்ற பொருட்களை பறிமுதல் செய்து அதனை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பட்டாசு வெடிப்பதற்கு தடை இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி உத்திரமேரூரில் பாமக வேட்பாளர் வரவேற்க பட்டாசுகள் விடுக்கப்பட்டது.

இதேபோல் கிராமப்புற பகுதிகளிலும் வரவேற்பு மேற்கொள்ள பட்டாசுகள் விற்கப்பட்டு வேட்பாளரை வரவேற்று மகிழ்ந்தனர்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் எனவும், குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் பட்டாசுகள் வெடிப்பதில் மிகுந்த கவனம் தேவை என்பதும் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசியல் நிகழ்வுகளில் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் தற்போது தேர்வு நேரங்கள் நடைபெற்று வருவதாலும் பட்டாசுகளை மாணவர்கள் நலன் கருதி வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 25 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!