/* */

5வது நாளாக குடிநீர் விநியோகம் இல்லை-பொதுமக்கள் புலம்பல்

5வது நாளாக குடிநீர் விநியோகம் இல்லை-பொதுமக்கள் புலம்பல்
X

பெரிய காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டதாகவும் , பெருநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பாலாறு மற்றும் திருப்பாற்கடல் பகுதிகளிலிருந்து பெறபட்டு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாண்டவர் பெருமாள் கோயில் தெரு , மாடவீதி , பானக்காரத்தெரு , திருப்புகூடல் தெரு , நிமந்தகாரத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை .இதனால் பொதுமக்கள் நாள்தோறும் கேன் குடிநீரை ரூ100லிருந்து 200 வரை செலவு செய்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் , பெருநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...