/* */

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக 1024 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில் பதிவான வழக்குகளில் இருந்து, ரூ 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக  1024 வழக்குகள் பதிவு
X

கோப்பு காட்சி

தமிழகத்தில், உருமாறிய கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மூன்றாவது முறையாக, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தவிர திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு செல்லவும், விதிகளும் கூடிய தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி பொதுமக்கள் வீதிகளில் திரிவதை கண்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தினர். நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல்பட்டவர்கள் மீது, பராபட்சமின்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில், மொத்தம் 1024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் வழக்குகளில் இருந்து 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தெரிவித்தார். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, உருமாறிய கொரோனா பரவலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  2. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  6. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  8. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!