/* */

நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து காஞ்சியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து காஞ்சியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் , நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாகக் கொடுத்தது.அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக் கொண்டது.

இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகர காங்கிரஸ் தலைவர் நாதன் முன்னிலையிலும் , காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை பழிவாங்கி வருவதற்க்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 26 July 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்