காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் 'விறுவிறு'
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனுத்தாக்கல் துவங்கி இன்று 6வது நாளில் திமுக , அதிமுக, பாமக, பாஜக சுயேச்சைகள் என பலர் ஒரே நேரத்தில் வருகை புரிந்ததால் இந்திரா காந்தி சாலை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வேட்பாளர் அறையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் வேட்பாளர்களுக்கு அமர்வதற்கு கூட இடம் இல்லாததால் நின்று கொண்டே வேட்புமனு செய்ய காத்திருக்கின்றனர்.
இன்றும் நாளையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய இயலும் என்பதால் கடைசி நேரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.