/* */

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

நங்கநல்லுார், 100 அடி சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு.

HIGHLIGHTS

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
X

நங்கநல்லுார், நுாறு அடி சாலை ஒட்டிய 46வது தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

நங்கநல்லுார், 100 அடி சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு காரணமாக, பல்வேறு நகர்களின் நுாற்றுகணக்கான குடியிருப்புகளில் கழிவறை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், 100 அடி சாலையில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதன்காரணமாக, ஸ்டேப் பாங்க் காலனி, ஏ.ஜி.எஸ்., காலனி, அய்யப்பாநகர், வோல்டாஸ் காலனி, சர்வமங்களா நகர், லட்சுமிநகர், நான்காவது நிலை, கண்ணன்நகர், எம்.எம்.டி., காலனி, ஸ்ரீவித்யா நகர், ஹிந்து காலனி உள்ளிட்ட பகுதிகளின் குடியிருப்பு கழிவறை வழியாக கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தது. தொடர் மழை தவித்து வந்த மக்கள் கழிவுநீர் புகுந்ததால் மேலும், பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து குடிநீர் வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தனர்.

திடீர் பள்ளம்: தொடர் மழை காரணமாக நங்கநல்லுார், 100 அடி சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. ஆலந்துார், பெருங்குடி மண்டம் இணையும் பகுதியான அங்கு மழைநீர் வடிகாலில் பிரச்னை உள்ளதால், 100 அடி சாலையில் மழைநீர் தேங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நுாறு அடி சாலை ஒட்டிய 46வது தெருவில் ஒன்றரை மீட்டர் வட்டத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!