/* */

அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

அந்தியூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட செல்வன், மைக்கேல் அந்தோனி ராபின்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். சோதனையில், 15 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடையின் உரிமையாளரான செல்வன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பள்ளிபாளையம் பகுதியில் மளிகை கடையில், புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்த, மைக்கேல் அந்தோனி ராபின் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவர் விற்பனைக்காக வைத்திருந்த 32 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் அந்தியூர் போலீசார் நடத்திய சோதனையில் 47 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!