/* */

ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சாலையில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே மூங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சாலையில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மதியம் ஆசனூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் தமிழ்நாடு - கர்நாடகா மாநிலம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டாரப் பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 April 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!