எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை கல்லூரியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடந்து வருகிறது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடந்து வருகிறது.
மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோடு அடுத்த சித்தோடு அருகே எல்லீஸ் பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. இதில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியை தமிழ்நாடு எறிபந்து சங்க தலைவர் நடராஜன் தொடங்கி வைத்தார். பொது செயலாளர் டாக்டர் மணி, சேர்மன் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் செந்தில் இனியன், கல்லூரி முதல்வர் காமேஷ் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் டாக்டர் சுமா யாதவ் ,ஈரோடு ஐடி விங் செயலாளர் முத்து ரமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதன் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இதே கல்லூரியில் தேசிய அளவிலான போட்டி வருகிற 18,19,20ம் தேதிகளில் நடக்கிறது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட எறிபந்து கழக பொது செயலாளர் பிரபு, துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சரவணகுமார், தொழில்நுட்ப கமிட்டி சேர்மன் செந்தில் குமார், தேர்வு கமிட்டி தலைவர் குருமூர்த்தி, பொருளாளர் பாப்பா ரெட்டி, துணைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர்.