/* */

கோபி அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: டாக்டர் மீது வழக்கு

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, முதன்மை குடிமை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: டாக்டர் மீது வழக்கு
X

மருத்துவர் ஆனந்தன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்த அந்த பெண்ணிடம் அங்கு வந்த, முதன்மை குடிமை மருத்துவர் ஆனந்தன் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவர் ஆனந்தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவர் ஆனந்தனை விசாரிக்க, 6 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் மூலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Updated On: 6 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!