/* */

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்..!

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து, சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்..!
X

வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பறையில் வைத்து சீலிட்ட போது எடுத்தப் படம்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து, பொதுத் தேர்தல் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணும் மையமான, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிட்டார்.

பின்னர், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு தொகுதியில் 1,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (ஏப்ரல் 20) சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றைய தினம் ஈரோடு மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 70.5 சதவீதம் வாக்களிப்பு பதிவாகியுள்ளது. மேலும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தொடர்ந்து கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறையானது மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.


வாக்கு எண்ணிக்கை நாள் வரை மத்திய ஆயுதப்படை காவலர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகிறது. சிசிடிவி கேமிராக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அமைக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சுமார் 30 கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு இருப்பறையின் அருகில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை உடனிருந்தனர்.

Updated On: 22 April 2024 11:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!