/* */

பவானி: மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி பலி

பவானி அருகே பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானி: மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி பலி
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 68). சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரி வெள்ளித்திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தனது பேரன் பிரகாஷ் (வயது 23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி அருகே மயிலம்பாடி-ஒலகடம் ரோட்டில் சென்று போது திடீரென நாய் குறுக்கே வந்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பின்பக்கம் காயம் ஏற்பட்டது. பிரகாசுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈஸ்வரி பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!