/* */

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலர் தூவி, தீபாராதனை விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை
X

காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீரானது பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாசன வாய்க்கால் மூலம் நேரிடையாகவும் மறைமுகவாகவும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் விவசாயிகள் மஞ்சள், நெல், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய சலவை மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள் வாய்க்காலில் கலப்பதால் நீர் மாசடைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம் சார்பில் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அருகே குலவிளக்கு அம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தீபாராதனை பெருவிழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டு தீபாராதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது காலிங்கராயன் வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பால், இளநீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திருமஞ்சனங்களை கொண்டு வாய்க்காலில் ஊற்றினார்கள்.

பின்னர் வாய்க்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு முளைப்பாரியும், தீபமும் விடப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். காலிங்கராயர் பெயரிலேயே விவசாயக் கல்லூரி நிறுவ வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 15 Aug 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!