/* */

உலக குளேக்கோமா வாரம்: ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு

உலக குளேக்கோமா வாரத்தை முன்னிட்டு, ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில், ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

உலக குளேக்கோமா வாரம்: ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு
X

ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக குளேக்கோமா வாரத்தை முன்னிட்டு, ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில், ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை, நந்தா நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா காலேஜ் ஆஃப் பாரா மெடிக்கல் அண்ட் அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மற்றும் பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


இதுகுறித்து, ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜய்குமார் கூறியதாவது, 2020ம் ஆண்டில் உலகளவில் குளுக்கோமா (கண் அழுத்தம்) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ம் ஆண்டில் 80 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. 2040ல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் மேற்பட்டோருக்கு இந்நோய் பற்றி தெரிவதில்லை. ஆரம்ப நிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை பறிபோவதைத் தடுக்கலாம்.

இந்த நோயால் 40 வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம். ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையில் பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் இங்கு உலகத்தரம் வாய்ந்த லாசிக் (ஸ்மைல்) மற்றும் அதி நவீன துல்லிய கண்புரை அறுவை சிகிச்சை (எல்ஆர்சிஎஸ்) அறிமுகப்படுத்த பட்டுள்ளது, என்றார்.


இநாத விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அபிராம சுந்தரி, சக்தி ராஜேஸ்வரி, மஞ்சுளா மற்றும் மேனேஜர் கிஷோர், மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்த், பாபு மற்றும் ரமேஷ் மற்றும் தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!