கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்: மணமகன் உள்பட 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே, 16வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த மணமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்துார் புதுக்கொத்துகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோர் முடிவு செய்தனர். இதுகுறித்து அறிந்த சைல்டுலைன் ஆலோசகர் தீபக்குமார், சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், திருமணம் நடத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார், சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.