/* */

அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி

அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி

HIGHLIGHTS

அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி
X

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாநகரை பொருத்த வரை 13 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் என இரண்டு வேளைகளில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பசியாறினர்.

தற்போது மாவட்டத்தில் மீண்டும் வைரஸ் தாக்கும் பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று முதல் அம்மா உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் உணவகங்கள் மூடப்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 April 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!