/* */

கொரோனா அச்சம்: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில், வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி, விற்பனை மந்தமாக இருந்தது.

HIGHLIGHTS

கொரோனா அச்சம்: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்
X

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த மாட்டுச்சந்தை, கடந்த வாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் வராததால் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை கூடியது. இன்று நடந்த சந்தையில் பசுமாடு 200, எருமை 50, கன்றுக்குட்டிகள் 50 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

ஆனால், கொரோனா அச்சம் காரணமாக வியாபாரிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்ததால், எப்போதும் நடைபெறும் விற்பனையில் பாதிஅளவு தான் நடைபெற்றது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வராததால், சந்தை வெறிச்சோடியது. தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவே உள்ளூர் வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் ரூ.15,000 முதல் 30 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!