/* */

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே வந்திருந்தன.

HIGHLIGHTS

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
X

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை கரவை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக கடந்த வாரம் கூடிய மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையிலும் மாடுகள் வரத்து குறைந்தது. இன்று 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே வந்திருந்தன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடந்த மாட்டு சந்தையில் கேரளா மாநில வியாபாரிகள் வரவில்லை. கர்நாடகம், ஆந்திரா போன்ற ஒரு சில மாநிலங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று 80 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!