/* */

ஈரோட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

ஈரோட்டில் முக கவசம் அணியாமல் வந்த 93 பேருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

அபராதம் விதிக்கும் அதிகாரிகள்.

ஈரோடு மாநகர் பகுதியில் மண்டலங்களிலும் 4 உதவி ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 93 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.18 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் , 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இன்று காலை கலெக்டர் அலுவலகப் பகுதியில் முக கவசம் அணியாத வர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 1 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!