Begin typing your search above and press return to search.
மொடக்குறிச்சி அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் மீட்பு
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண்ணிக்கு 25 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கலாம் என்றும் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.