/* */

பவானி அருகே வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஒரிச்சேரிப்புதூரில், வன்னியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு ஆணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர்களும் , பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை மீண்டும் வழங்க கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கும் விதமாக, அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒரிச்சேரிப்புதூர் கிளையின் வன்னியர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பாட்டாளி கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சார்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!