/* */

பர்கூர் மலைப் பகுதியில் 467 பேருக்கு. 52.71 லட்சத்தில் நலத்திட்ட உதவி

பர்கூர் மலைக் கிராம மக்கள் 467 பேருக்கு ரூ. 52.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

பர்கூர் மலைப் பகுதியில் 467 பேருக்கு. 52.71 லட்சத்தில்  நலத்திட்ட உதவி
X

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பர்கூர் மலை பகுதி மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சியில் தேவர்மலை,தாமரைக்கரை, பர்கூர் மலைக் கிராம மக்கள் 467 பேருக்கு ரூ. 52.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு,மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பர்கூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 467 பயனாளிகளுக்கு ரூ.52.71 லட்சம் மதிப்பிலான அரசின் நலதிட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தாமரைக்கரையில் ரூ. 10.65 லட்சம் மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.


வருவாய்த் துறையின் சார்பில் 88 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 18 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 198 பேருக்கு பழங்குடியினர் குடும்ப நல வாரிய அட்டைகள், 134 பேருக்கும் பழங்குடியினர் ஜாதி சான்றுகள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 23 பேருக்கு ரூ. 39.10 லட்சத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டும் உத்தரவுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On: 20 Nov 2021 10:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!