/* */

கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், ஒருசில தனியார் மருத்துவமனைகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்தியூர் - பவானி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அளவுக்கதிகமாக நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுமதித்தது தெரிய வந்தது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை; பலரும் முகக்கவசம் அணியவில்லை.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்..

Updated On: 29 May 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  6. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  8. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  10. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!