/* */

புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ

குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில், புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ
X

நலத்திட்ட உதவி வழங்கிய அந்தியூர் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சி கரட்டூர் மேடு பகுதியில், புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குப்பாண்டம்பாளையம் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி ஊராட்சி அலுவலர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2021 10:30 AM GMT

Related News