சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் போனது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து 6 லட்சத்து 64 ஆயிரத்து 482 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 76 கிலோ எடையு ள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.108.9, அதிகபட்ச விலையாக ரூ.182.99, சராசரி விலையாக ரூ.143.22 என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 009-க்கு விற்பனையானது.
இதேபோல அவல்பூ ந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 104 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 221 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனை தேங்காய் பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.65 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.5 காசுகள், சராசரி விலையாக ரூ.76.55 காசுகள் என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.52.90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.71.35 காசுகள், சராசரி விலையாக ரூ.67.65 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 473-க்கு விற்பனையானது. மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.