/* */

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு
X

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 14 வட்டார சுகாதார நிலையங்கள் மூலமாகவும், சிறப்பு முகாம் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் தோமையார்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதனை, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து காமலாபுரத்தில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாமுக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 28 May 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!