உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிட சமக ஆர்வம்: சரத்குமார்
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்வம் காட்டி வருவதாக சரத்குமார் பேட்டி
HIGHLIGHTS
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திண்டுக்கல்லில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நாதன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், பின்னர் சரத்குமார் செய்தியாளரிடம் பேசுகையில்,,
திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அவர்கள் செயல்பாடு குறித்து கூற முடியும் அந்தவகையில் அவர்கள் கடந்த ஆண்டுகளை விட என்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றை செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவைப்படும் அதன் பிறகு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும்,
மத்திய அரசு தமிழக முதலமைச்சரின் தேவையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செவிசாய்க்க வேண்டும் கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்துள்ளது உண்மை அதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. அதில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஏன் பயப்பட வேண்டும் நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை விசாரணை நடத்துவதில் தவறில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து மீண்டும் விசாரணை நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமக வினர் ஆர்வம் காட்டி மனுக்கள் கேட்டு வருகின்றனர். மக்களுக்கு யார் யாரெல்லாம் சேவை செய்ய நினைக்கிறார்களோ அவர்களை போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறேன் மக்கள் பணி செய்ய வேண்டிய பதவிக்காக உள்ளாட்சி அமைப்பு இருப்பதால் அதை கட்சிக்கு அப்பாற்பட்டு நான் பார்க்கிறேன்
நேரடியாக மக்களிடம் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் நிச்சயமாக தேர்தலில் நிற்பார்கள் அந்தந்தப் பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டணியுடன் சேர்ந்து நிற்பதாக கூறினால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.