திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது: போலீசார் அதிரடி
திண்டுக்கல்லில் கொலையில் தொடர்புடைய குற்றவாளி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல், குட்டியபட்டி பகுதியில் 20.09.2021 அன்று முகமது இப்ராஹிம் (26) என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, இக்கொலை வழக்கு தொடர்பாக பேகம்பூர் பகுதியை சேர்ந்த லத்தீப் மெளலானா(23), என்பவர் உட்பட 5 பேரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் 5 பேரில் 4 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 5-ம் எதிரியான அல்ஆசிக்(28) என்பவரின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கலெக்டர் விசாகன், அல் ஆசிக்கை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் அல் ஆசிக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.